Tuesday 28 February 2012

கலைமொழி-8

புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது.

நீங்கள் எழுத்துக்களைக் கோர்த்தவுடன் முடித்துவிட்டேன் என்பதை அழுத்தினால் அருகில் உள்ள கட்டத்தில் சேர்த்த வாக்கியங்கள் வந்துவிடும் .அதை கமெண்டில் 'copy'&  'paste'செய்து அனுப்புங்கள்.
சென்றக் கலைமொழிக்கான விடை:
மூன்றெழுத்து விலங்கு.நடு எழுத்து இல்லாவிடில் குழந்தைகள் அதை விரும்புவர்.கடைசி எழுத்தோ மாதமாகும்.அது என்ன விலங்கு?

பதில்: கழுதை
கழுதையை சரியாக கண்டுபிடித்தவர்கள்:யோசிப்பவர், பூங்கோதை, முத்து,மாதவ்,அரசு அந்தோணி,தமிழ்பிரியன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

Saturday 25 February 2012


இது நான் திருநெல்வேலி சென்றிருந்த பொழுது ஓடும் பேருந்தில் எடுத்தது, நிறைய எடுத்தேன், இது தான் எனக்கு பிடித்தது!!!!

Wednesday 1 February 2012

கலைமொழி-7


புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது. இந்தக் கலைமொழி ஒரு கேள்வியுடன் அமைந்துள்ளது.அதற்குரிய விடையையும் சேர்த்தே சொல்லுங்கள் .
சென்றக் கலைமொழிக்கான விடையைக் கூறியவர்கள்:
முத்து,யோசிப்பவர் பூங்கோதை,தமிழ் பிரியன்,அரசு.
அனைவருக்கும் நன்றி.
10அம்மா.
சென்றக் கலைமொழிக்கான விடை:
நேற்றுக் கொலை செய்த பல ஆயிரம் பேர்களுக்கு இன்று உயிர் கொடுப்பதற்காக என் தந்தை சென்றுள்ளார் என ஒரு சிறுவன் அரசனிடம் கூறினால் அது உண்மையா? பொய்யா ? 

உண்மைதான்.ஏனெனில் அவன் தந்தை ஒரு விவசாயி.நேற்று பிடுங்கிய நாற்றை இன்று நடுவதற்காக சென்றுள்ளார் எனக் கூறினான்.
நன்றி.

புதிர் கணக்கு-4


மகேசனிடம் 30 மணிபர்ஸுகள் 3 கலர்களில் இருந்தன
அதில்:
      10 நீல  மணிபர்ஸுகளில்       ரூ-300ம்
      10மஞ்சள்  மணிபர்ஸுகளில்     ரூ-200ம்
      10பச்சை மணிபர்ஸுகளில்       ரூ-100ம் வைத்திருக்கிறார்,
எனில்,அவர் தம் 3 குழந்தைகளுக்கும் மணிபர்சுகளின் எண்ணிக்கை சமமாகவும், தொகை சமமாகவும் எப்படிப் பிரித்துக் கொடுப்பார்?

கொசுறாக சில வேடிக்கை கணக்குகள்:
1. இருபத்தொன்பதில் 29-ஐ கழித்தால் மீதி 9 வரும் எப்படி?
2. 40-லிருந்து 10-ஐ 4முறை கழித்துப் பார்த்தால் கிடைக்கும் விடை என்ன?
3. 1961- இந்த எண்ணின் சிறப்பு என்ன?